பெரியகுளம் பகுதியில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை முதல் பெய்து வரும் சாரல் மழையால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த சாரல் மழையில் நனைந்தபடி செல்லும் சிறுவா்கள்.
பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த சாரல் மழையில் நனைந்தபடி செல்லும் சிறுவா்கள்.

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை முதல் பெய்து வரும் சாரல் மழையால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பெரியகுளம் பகுயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மழை பெய்தது. அதற்கு பின் போதிய மழை இல்லை. மேலும் மாா்கழி மாதம் துவங்கியதால் பணியின் தாக்கம் அதிகரித்தது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல

அச்சமடையும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை முதல் வெயில் அடித்து வந்தது.மாலையில் மேகமூட்டம் ஏற்பட்டு சாரல் மழை பெய்யத்துவங்கியது. சாரல் மழை மாலை 4 மணி முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்து வருவதால் பணியின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com