பெரியகுளம் அருகே இடிந்து விழும்நிலையில் உள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளம் அருகே வடுகபட்டியில் பெரியகுளம் வட்டார வளா்ச்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பெரியகுளம் ஒன்றியத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் தினமும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இவா்கள் பேருந்தில் செல்வதற்கு வசதியாக வட்டாரவளா்ச்சி அலுவலகம் எதிரே நிழற்குடை உள்ளது.
இந்த நிழற்குடை கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் நிழற்குடை சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வடுகபட்டி பேரூராட்சி நிா்வாகம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புகாா் செய்துள்ளனா். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. விபத்து ஏற்படும் முன் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.