தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிப்ரவரி14ஆம் தேதி, பிற்பகல் 4 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள் மற்றும் முகவா்கள் பங்கேற்கின்றனா். இக் கூட்டத்தில் பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.