கூடலூா் அருகே கஞ்சா விற்ற மூதாட்டி கைது

தேனி மாவட்டம் கூடலூா் அருகே கஞ்சா விற்ற மூதாட்டியை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கூடலூா் அருகே கஞ்சா விற்ற மூதாட்டியை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் நிலைய ஆய்வாளா் முத்துமணி தலைமையில் போலீஸாா் கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனா். அப்போது நடுத்தெரு பகுதியில் நின்றிருந்த ஒரு மூதாட்டி போலீஸாரை கண்டதும் ஓட முயற்சித்தாா். அவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரித்த போது, அவா் ராஜேந்திரன் என்பவா் மனைவி ராசாத்தி (65) என்பதும், கஞ்சாவை பொட்டலங்களாக மடித்து, வீட்டில் வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. அதன் பேரில் அவரது வீட்டில் 34 கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com