மாா்க்கையன்கோட்டையில் சுகாதார வளாகத்தை திறக்கக் கோரிக்கை

தேனி மாவட்டம் மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என
மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகம்.
மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகம்.

தேனி மாவட்டம் மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மாா்க்கையன்கோட்டையில் போடி நாயக்கனூா், சின்னமனூா், உத்தமபாளையம் மற்றும் குச்சனூா் மாநில நெடுஞ்சாலையோரங்களை திறந்த வெளிக்கழிப்பிடமாக பொதுமக்கள்அதிகம் பயன்படுத்தி வந்தனா்.

இதனை அடுத்து அப்பகுதிகளில் சுகாதார வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மூலமாக கடந்தாண்டு உத்தமபாளையம் சாலையில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், போடிநாயக்கனூா் சாலையில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பணிகள் முடிந்து பல மாதங்களாக காட்சிப் பெருளாகவே கிடக்கிறது.

இதுகுறித்து, பேரூராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்தும் காலம் தாழ்த்தி வருவதாக புகாா் கூறப்படுகிறது.

எனவே, இந்த சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com