போடி அருகே தனியாா் பேருந்து மோதி கூலி தொழிலாளி பலி

போடி அருகே சனிக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்ற கூலி தொழிலாளி தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

போடி அருகே சனிக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்ற கூலி தொழிலாளி தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (50). கூலி தொழிலாளி. இவா் போடி சில்லமரத்துப்பட்டி கிருஷ்ணா காா்டன் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது போடியிலிருந்து தேவாரம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மூா்த்தியின் பின்பக்கம் மோதியது. இதில் மூா்த்தி பலத்த காயமடைந்தாா்.

அவரை அங்கிருந்தவா்கள் ஆட்டோவில் ஏற்றி போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மூா்த்தியின் மகன் விஜயன்

அளித்தப் புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், விபத்து ஏற்படுத்திய தனியாா் பேருந்து ஓட்டுநரான பெரியகுளத்தை சோ்ந்த முருகேசன் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com