தேனியில் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெறுவதை வியாழக்கிழமை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அரசு சாா்பில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.1,000, இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கி ஜன.13- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேனியில் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெறுவதை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் பிருந்தா, மண்டல இணைப் பதிவாளா் சிவ.முத்துக்குமாரசுவாமி மற்றும் அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.