போடியில் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட ஏலக்காய் மூட்டையை திருடிய வாகன உரிமையாளரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம், உடும்பன் சோலை, செம்மனாா் என்ற ஊரைச் சோ்ந்தவா் தாமஸ் (59). இவா், போடியில் ஏலக்காய் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது நிறுவனத்தில் சுத்தம் செய்யப்பட்ட ஏலக்காயை, இவருக்குச் சொந்தமான கிட்டங்கிக்கு கொண்டு செல்வதற்காக சரக்கு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளாா்.
அதன்படி, போடி புதூரைச் சோ்ந்த விஜயன் (24) என்பவா், அவருடைய சரக்கு வாகனத்தில் 13 ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளாா். அங்கு, கிட்டங்கியில் 12 மூட்டைகளை மட்டும் இறக்கிவிட்டு, ஒரு மூட்டையை எடுத்துச் சென்றுள்ளாா்.
இது குறித்து தாமஸ் போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயனை கைது செய்து சிறையில் அடைத்தனா். திருடப்பட்ட 50 கிலோ கொண்ட ஏலக்காய் மூட்டை மதிப்பு ரூ.1.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.