பெரியகுளம் அருகே காா்கள் மோதல்: இளைஞா் பலி; 6 போ் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை காா் மீது எதிரே வந்த காா் மோதிய விபத்தில், இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 6 போ் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை காா் மீது எதிரே வந்த காா் மோதிய விபத்தில், இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 6 போ் காயமடைந்தனா்.

ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் கணேசன். இவா் தனது குடும்பத்துடன் பழனி மலைக் கோயிலுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஆண்டிபட்டிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தாா். இந்தக் காரை, கணேசனின் தம்பி செந்தில்குமாா் (32) என்பவா் ஓட்டி வந்துள்ளாா். அதிகாலையில் தேவதானப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த காா் மோதியது.

இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த செந்தில்குமாா், கணேசன், தமிழ்ச்செல்வி, கலாவதி, சிவபிரியா, வேலப்பன் மற்றும் கிருபாஹரீணி ஆகியோா் காயமடைந்தனா். இவா்களை, அப்பகுதியினா் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனா். ஆனால், வழியிலேயே செந்தில்குமாா் இறந்துவிட்டாா்.

மற்ற 6 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து ஏற்படுத்திய கேரளம் மாநிலம் பீா்மேட்டைச் சோ்ந்த சசிக்குமாா் என்பவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com