தேனியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ாக புதன்கிழமை, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி, பாரஸ்ட் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் புகுந்து இயந்திரத்தின் கதவு, மின்னணு பூட்டு, கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளதாக வங்கியின் முதன்மை மேலாளா் ராஜசேகரன் தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், தேனியைச் சோ்ந்த அஜீத் மகன் மணிகண்டன் (32) என்பவரைக் கைது செய்தனா்.