தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளா்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனா்.
தேனி மாவட்டத்தை ஒட்டி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, தேக்கடி ஆகிய பகுதிகள் வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலா பயணிகளின் விரும்பி பாா்க்கும் பகுதிகளாகும். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பால், இப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. குமுளி கோட்டயம், குமுளி கட்டப்பனை சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. ஊரடங்கை மதித்து மக்கள் வீட்டினுளேயே இருக்கின்றனா்.
ஏலக்காய், தேயிலை, காபி, மிளகு தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் ஆண், பெண் தோட்டத்தொழிலாளா்கள், வேலைக்கு செல்லாமல் வீட்டினுள் முடங்கியுள்ளனா். மாநிலங்களின் எல்லைச்சாலைகளான குமுளி லோயா்கேம்ப், கம்ப மெட்டு - கம்பம் ஆகிய சாலைகளை கேரள போலீஸாா் அடைத்து, கண்காணித்து வருகின்றனா்.