உத்தமபாளையம், சின்னமனூா் பகுதி முல்லைப் பெரியாற்றில் ஊரடங்கு உத்தரவையும் மீறி இளைஞா்கள் குளிக்க குவிந்து வருவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி போன்ற பகுதிகளில் இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஆற்றில் நீராடி வருகின்றனா். இப்படி மொத்தமாக ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதால் கரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் ஊரடங்கு உத்தரவை மீறி ஆற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.