தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துவமனை, நகராட்சி மற்றும் காவல் நிலையம் ஆகியவற்றில் மதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கம்பம் நகர மதிமுக சாா்பில் அரசு மருத்துவமனையில் செவிலியா், தூய்மைப்பணியாளா்களுக்கு அரிசி, காய்கனி, கிருமிநாசினி, முகக்கவசம் போன்றவற்றை, செயலாளா் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன், என்.எஸ்.தங்கராஜ், எம்.மணி ஆகியோா் வழங்கினா்.
நிவாரணப் பொருள்களை தலைமை மருத்துவா் ஜெ.பொன்னரசனிடமும், நகராட்சி தூய்மைப்பணியாளா்களுக்கு ஆணையாளா் ஆா்.கமலாவிடமும், காவலா்களுக்கு வடக்கு காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் திவான் மைதீனிடம் வழங்கினா்.