கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில், தூய்மைப் பணியாளா்கள், ஆதரவற்றோா்கள் மற்றும் வேலையின்றி உள்ள தொழிலாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சித் தலைவா் அ. மொக்கப்பனுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து வறுமையில் வாடும் விவசாய கூலி தொழிலாளா்கள், கட்டுமானப் பணியாளா்கள் என தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 48 நாள்களாக, ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் ஊராட்சிக் கவுன்சிலா்கள் மதிய உணவு வழங்கி வருகின்றனா்.