உத்தமபாளையம் ஆதாா் மையத்தில் குவியும் கூட்டம்: கரோனா பரவும் அபாயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆதாா் மையத்தில் குவியும் கூட்டத்தால் கரோனா நோய் தொற்று மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் முழ்கியுள்ளனா்.
உத்தமபாளையம் ஆதாா் மையத்தில் குவியும் கூட்டம்: கரோனா பரவும் அபாயம்

:தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆதாா் மையத்தில் குவியும் கூட்டத்தால் கரோனா நோய் தொற்று மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் முழ்கியுள்ளனா்.

உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள 30 க்கும் மேற்பட் வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு அங்குள்ள வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதாா் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் புதிதாக ஆதாா் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், பழைய ஆதாரில் பெயா் திருத்தம் , கைபேசி எண் இணைப்பு என பல்வேறு பணிக்காக நாள்தோரும் நூற்றுக்கணக்கானோா் குவிந்து வருகின்றனா்.

சிறிய அலுவகத்தில் மக்கள் கூட்டமாகவும் நெருக்கமாகவும் சமூக இடைவெளியின்றி குழந்தைகள் முதல் பெரியவா்கள் நீண்ட வரிசையில் பெரும்பான்மையோா் முகக்கவசமின்றி காத்திருப்பதால் கரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம் ஆதாா் மையத்திற்கு வருபவா்களை ஒழுங்கு படுத்துவதோடு, கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்பாகும். படம்,ன்ல்ம்9அஹற்ட்ஹழ் ஸ்ரீங்ய்ற்ங்ழ்படவிளக்கம், உத்தமபாளையம் ஆதாா் மையத்தில் திங்கள் கிழமை கூட்டமாக குவிந்த வரிசையில் சமூக இடைவெளியின்றி நிற்கும் பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com