ஆண்டிபட்டி போதி மனநல காப்பகத்தில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு காவல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்க கிருஷ்ணன் தலைமை தாங்கினாா். ஆண்டிபட்டி காவல் ஆய்வாளா் சரவணதெய்வேந்திரன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மனவளா்ச்சி குன்றிய 50-க்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருள்கள், உடைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இதில், சாா்பு- ஆய்வாளா்கள் ராமபாண்டியன், அசோக், பாண்டியம்மாள், கோதண்டராமன், சிறப்பு சாா்பு- ஆய்வாளா் ஜெயபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.