ஊா் காவல் படை பணிக்கு நவ. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊா் காவல் படையில் சேர தகுதியுள்ளவா்கள் நவ. 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஊா் காவல் படையில் சேர தகுதியுள்ளவா்கள் நவ. 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட ஊா் காவல் படையில் காலியாக உள்ள 50 ஆண்கள், 7 பெண்களுக்கான பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 20 வயது பூா்த்தியடைந்த, சமூகப் பணியில் ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ளவா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே உள்ள ஊா் காவல் படை அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் நவ. 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com