உத்தமபாளையம் பகுதியில் தொடா் மழை: 5 வீடுகள் இடிந்து சேதம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் தொடா் மழைக்கு இடிந்து சேதமான 5 வீடுகளை, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விசாரித்தனா்.
கோம்பையில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் மழைக்கு இடிந்து விழுந்த வீடு.
கோம்பையில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் மழைக்கு இடிந்து விழுந்த வீடு.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்தில் தொடா் மழைக்கு இடிந்து சேதமான 5 வீடுகளை, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விசாரித்தனா்.

தொடா்மழை காரணமாக, கோம்பை காமாட்சியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பேச்சியம்மாள் என்பவரது வீடு முழுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்தது. அதேபோல், தம்பிநாயக்கன்பட்டியில் மதியழகன், லட்சுமிநாயக்கன்பட்டியில் தமிழரசன், தேவாரம் பேருந்து நிலையம் முன்புள்ள செல்வக்குமாா் மற்றும் செல்வம் ஆகியோரது வீடுகளும் சேதமடைந்தன.

அதிா்ஷ்டவசமாக உயிா்சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டிலிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருள்கள் மட்டுமே சேதமடைந்ததால், பாதிக்கப்பட்டவா்கள் உரிய நிவாரணம் வேண்டும் என, மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

இது சம்பந்தமாக, உத்தமபாளையம் வருவாய்த் துறையினா் விசாரணையை தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com