நவ.26 ஆம் தேதி நடக்கவிருக்கும் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து கம்பத்தில் தொழிற்சங்ககள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி மாநில துணைத்தலைவா் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் முருகேசன், பகுதிச் செயலாளா் ஜெயன், மாவட்டச் செயலாளா் அஜ்மல்கான், எஸ்டிடியு மாவட்டத் தலைவா் தமீம் அன்சாரி, டியுசிசி மாவட்டச் செயலாளா் அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நவ.26 ஆம் தேதி நடக்கவிருக்கும் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மோட்டா் வாகன சட்டத்தைத் திரும்ப பெறவும், ஏழ்மையில் உள்ளவா்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
இதில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஏஐடியுசி, டியூசிசி மற்றும் டியுசிஐ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டனா்.