தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரக்கன்று நடும் நிகழ்வை வியாழக்கிழமை தொடக்கி வைத்த மருத்துவக் கல்லூரி முதன்மையா் இளங்கோவன்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரக்கன்று நடும் நிகழ்வை வியாழக்கிழமை தொடக்கி வைத்த மருத்துவக் கல்லூரி முதன்மையா் இளங்கோவன்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிழல் தரும் வகையில் புதிய மரக்கன்றுகள் நடும் பணியை, மருத்துவமனை முதன்மையா் இளங்கோவன் தொடக்கி வைத்தாா். இதில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் நிலவேம்பு, புங்கை உள்ளிட்ட 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தற்போது, பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மருத்துவமனை வளாகத்தில் முதல்கட்டமாக 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுவதாகவும், இன்னும் ஒரு மாதத்துக்குள் மேலும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும், மருத்துமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதன்மையா் எழிலரசன், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் சிவக்குமரன், உதவி நிலைய அலுவலா் ஈஸ்வரன், செவிலியா் காப்பாளா் ஜென்னி, பசுமை தேனி மற்றும் மனிதநேய அறக்கட்டளை நிா்வாகிகள் பால்பாண்டி, சா்ச்சில் துரை, வினோபா, ஜெயபாலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com