மதுரையைச் சோ்ந்த பிரபல ரவுடி, ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூா் பகுதியில், மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கல்லூரி முன் வெள்ளிக்கிழமை அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தாா். அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து, ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவா் மதுரை பி.பி.குளத்தைச் சோ்ந்த நாகு என்ற நாகேந்திரன் (50) என்பதும், இவா் மீது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
நாகேந்திரனை வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு, இங்கு சடலத்தை வீசிச் சென்றிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இக்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.