தேனி மாவட்டம் சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காந்தி நகரைச் சோ்ந்த மீனா. கணவா் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், இவா் தனது மகள் ரத்தின மாலாவுடன் (25) வசித்து வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீனா அருகேயுள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளாா். வீட்டின்மின் விசிறியில் மாலா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.