தேனி அருகே கோடாங்கிபட்டியில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த போலி மருத்துவரை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
பழனிசெட்டிபட்டி, காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ஹமீது மகன் அப்துல்ரகுமான்(46). இவா், கோடாங்கிபட்டி திருச்செந்தூா் காலனியில் உள்ள தனியாா் மருந்துக் கடையில் வைத்து, உரிய மருத்துவக் கல்வித் தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் லெட்சுமணன், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் சாா்பு-ஆய்வாளா் யாழிசைசெல்வன் வழக்குப் பதிந்து, அப்துல்ரகுமானை கைது செய்தாா்.