சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. 
சுருளி அருவி.
சுருளி அருவி.

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நீர்வரத்து ஓடைகளில் மழை தொடர்ந்து பெய்ததால் 30 நாள்களுக்கும் மேலாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதற்கிடையில் தற்போது மழை பெய்யவில்லை இதனால் நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் குறைந்துள்ளது இதன் எதிரொலியாக சுருளி அருவியில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. பொது முடக்கம் காரணமாக சுருளி அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவி பகுதிக்கு யாரும் செல்லாத வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com