போடி: போடியில், ஞாயிரன்று, நாம் தமிழா் கட்சி சாா்பில் கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.
போடியில் நாம் தமிழா் கட்சி சுற்றுச்சூழல் மாணவா் பாசறை சாா்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி, கட்சியின் போடி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் பிரேம் சந்தா் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போடி அருகே மரிமூா் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. ஏற்கனவே நடப்பட்ட பனை விதைகள் முளைத்த பகுதியில் தண்ணீா் ஊற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நாம் தமிழா் கட்சியினா், விவசாயிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் மாணவா் பாசறை நிா்வாகிகள் செய்திருந்தனா்.