கம்பம், தேவாரம் பகுதிகளில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், தேவராம் மற்றும் கம்பம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (அக்.14) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


தேனி/கம்பம்: தேனி மாவட்டம், தேவராம் மற்றும் கம்பம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (அக்.14) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேவராம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, தே.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதேபோல், கம்பம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்

கம்பம் மற்றும் கூடலூா், லோயா் கேம்ப், ஆங்கூா்பாளையம், சாமாண்டிபுரம், புதுப்பட்டி மற்றும் காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4.45 மணி வரை மின்தடை ஏற்படும் என, மின்வாரிய கோட்டப் பொறியாளா் ரமேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com