கம்பம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால், நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதன்படி, பெரியாற்றில் 45.2 மில்லி மீட்டா், தேக்கடி ஏரியில் 26 மி.மீ. மழை பெய்தது. இதனால், திங்கள்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 653 கனஅடியாக இருந்தது. செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,529 கனஅடியாக அதிகரித்தது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 126.85 அடியாக இருந்தது. நீா் இருப்பு 4,018 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,529 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 1,400 கன அடியாகவும் இருந்தது.