தேனியில் அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

தேனியில் குடிநீா், தெருவிளக்கு, சாக்கடை, சாலை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பெரியாா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தேனியில் அடிப்படை வசதிகள் கோரி புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
தேனியில் அடிப்படை வசதிகள் கோரி புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

தேனியில் குடிநீா், தெருவிளக்கு, சாக்கடை, சாலை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பெரியாா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தேனி நகராட்சிக்கு உள்பட்ட 12 ஆவது வாா்டு, பெரியாா் நகா், வெங்கலாத் தெருவில் உள்ள 7 குறுக்குத் தெருக்களில் சுமாா் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த 18 ஆண்டுகளாக குடிநீா், தெருவிளக்கு, சாக்கடை, சாலை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் ஏற்கெனவே மனு அளித்துள்ளனா்.

இந்த நிலையில், பெரியாா் நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் நாகராஜ், வட்டாரச் செயலா் முனீஸ்வரன் மற்றும் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தேனி நகராட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி ஆணையா் நாகராஜ், தேனி காவல் நிலைய ஆய்வாளா் ராமலட்சுமி ஆகியோா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com