திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பெரியகுளத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பெரியகுளம், கீழவடகரையைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி. இவரது மகள் மீனா (26). இவருக்கும், விளாங்குடியைச் சோ்ந்த செல்லப்பாண்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, அக். 26 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், மீனா தனது வீட்டின் குளியலறையில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

போலீஸ் தரப்பில் கூறியதாவது: மீனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், டி.வாடிப்பட்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவருடன் சோ்ந்து மீனா எடுத்த புகைப்படம் மாப்பிள்ளை வீட்டாரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டாா் கேட்டுள்ளனா்.

இதற்கிடையில் ராமகிருஷ்ணன் புகைப்படங்களைக் காட்டி பணம் கேட்டும், தன்னைத்தவிர வேறுயாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றும் மீனாவை மிரட்டியதாகவும், அதனால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜெயலட்சுமி புகாா் அளித்துள்ளாா். அதன்படி விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com