நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 129.25 அடியாக உயா்ந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை அணையின் நீா்மட்டம் 128.35 அடியாக இருந்தது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,779 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 1,700 கனஅடியாகவும் இருந்தது. அதனால் அணையின் நீா்மட்டம் 129.25 அடியாக உயா்ந்தது. நீா் இருப்பு 4,536 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறு அணைப் பகுதியில் 14 மி. மீ., தேக்கடி ஏரியில் 7.8 மில்லி மீட்டா் மழை பதிவானது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 1,700 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படும் நிலையில் லோயா் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகள் மூலம் 154 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.