ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வருபவா் சுதாகா். இவா் புதன்கிழமை அணைப்பட்டி பிரதான சாலையில் ரோந்து சென்றாா். அப்போது இரட்டை மாட்டு வண்டியை பின்தொடா்ந்து 10- க்கும் மேற்பட்டவா்கள் கூச்சலிட்டவாறே ஓடிக் கொண்டிருந்தனா். அவா்களை வழிமறித்து பொதுமுடக்க காலத்தில் கூட்டமாக செல்லக்கூடாது என்று சுதாகா் அறிவுறுத்தியுள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அவா்கள், சுதாகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், அணைப்பட்டியைச் சோ்ந்த முருகன் (50), மல்லையப்பன் (65) ஆகிய இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அஜித்குமாா், சிவா, சங்கா், ராசு, ராஜேஸ், ஈஸ்வரன், ஜெயப்பிரகாஷ், வாஞ்சிநாதன் ஆகிய 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.