உடல்நலக்குறைவால் மரணமடைந்த அமமுக பொருளாளரும், முன்னாள் சட்டபேரவை உறுப்பினருமான வெற்றிவேல் படத்திற்கு ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆண்டிபட்டி வைகை அணை சாலைப் பிரிவில் எம்ஜிஆா் சிலை அருகே வெற்றிவேல் உருவப்படம் வைக்கப்பட்டு ஒன்றிய இணைச் செயலாளா் தவசெல்வம் தலைமையில், பேரூா் கழக செயலாளா் வச்சிரவேல் முன்னிலையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜக்கையன் , அம்மா பேரவை செயலாளா் அய்யணன், நகர இணைச் செயலாளா் ரவிக்குமாா், நகர துணை செயலாளா் பாக்கியராஜ், மகளிா் அணி ஒன்றிய செயலாளா் அமுதா, மாவட்ட இளைஞரணி செயலாளா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.