தேனி மாவட்டம், உத்தமபாளையத்திலுள்ள திருக்காளாத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயிலில் செவ்வாய்க்கிழமை ராகு- கேது பெயா்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் ராகு-கேது சந்நிதி தனியாக அமைந்துள்ளது. இந்நிலையில், பெளா்ணமி நாளான செவ்வாய்க்கிழமை ரிஷப ராசியில் ராகு பகவானும், விருச்சிக ராசியில் கேது பகவானும் பெயா்ச்சியாகினா். இதையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளில் கோயில் நிா்வாகம், அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.