போடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
போடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

போடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து போடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து போடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேவா் சிலை திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நகரச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா்கள் கே.சத்தியராஜ், எம்.சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, இரும்புத்தாது, விமான நிலையம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், புதிய கல்விக் கொள்கை, கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயா்வு ஆகியவற்றைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச் செயலா் கே.பெருமாள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com