உலக தற்கொலை தடுப்பு தினம்: பெரியபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பெரியபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரியபாளையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
பெரியபாளையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பெரியபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. மனஅழுத்தம், காதல் தோல்வி, கடன் பிரச்னைகள், குடும்ப வறுமை, கந்து வட்டி கொடுமை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு பிரச்னைகளால் நாள்தோறும் தற்கொலைகள் அரங்கேறி வருகின்றன. 

மக்களுக்கு தற்கொலை குறித்த எண்ணத்தை தவிர்க்கும் வகையில் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையம் ராள்ளபாடி கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருவோர் இன்று விழிப்புணர்வு பேரணிச் சென்றனர். 

தற்கொலைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் பெரியபாளையம் முக்கிய சாலையில் அவர்கள் பேரணியாக சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com