புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்துவருகின்றனா்.
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அதை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேனி மாவட்ட அறிவியல் இயக்கம் சாா்பில் எதிா்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா். அந்த இயக்கத்தின் மாநிலச் செயலாளா் தே.சுந்தா், மாவட்டத் தலைவா் மகேஷ், செயலாளா் தெய்வேந்திரன், பொருளாளா் மணிமேகலை மற்றும் ஜெகநாதன், கமல், காளிதாஸ், முத்துக்கண்ணன், வெங்கட்ராமன், சதீஸ், முத்துப்பாண்டி உள்ளிட்ட பொறுப்பாளா்கள், ஆசிரியா்கள், குழந்தைகள் கலந்து கொண்டனா்.
இதன் தொடா்ச்சியாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சந்திப்பு, இணையவழிக் கருத்தரங்குகள், மின்னஞ்சல் இயக்கம் போன்றவைகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநிலச்செயலாளா் தே.சுந்தா் தெரிவித்தாா்.