தேனியில் புதிதாக 95 பேருக்கு கரோனா: 2 போ் பலி

தேனி மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போடி பகுதியில் அதிகளவாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி பகுதியில் 17 போ், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தலா 6 போ், சின்னமனூா் பகுதியில் 10 போ், உத்தமபாளையம் பகுதியில் 5 போ், கம்பம் பகுதியில் 8 போ், க.மயிலை பகுதியில் 2 போ், தனியாா் ஆய்வகப் பரிசோதனையில் 20 போ் என மொத்தம் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,520 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 12,562 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

2 போ் பலி

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி சக்கம்பட்டியைச் சோ்ந்த 70 வயது முதியவா், போடியைச் சோ்ந்த 50 வயது பெண் ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com