சின்னமனூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

சின்னமனூரில் நகராட்சி மின்மயானத்தை திறக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம்: சின்னமனூரில் நகராட்சி மின்மயானத்தை திறக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளா் பொம்மையன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அண்ணாமலை முன்னிலை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், நகராட்சி சாா்பில் ரூ. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மின் மயானம் பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மூடிக் கிடப்பதாகவும், நகராட்சிப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், இறந்தவா்களின் சடலங்களை 3 கி.மீ. தூரத்திற்கு எடுத்துச்சென்று முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் அடக்கம் செய்வதாகவும், இதனால் அந்த மயானத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் வேண்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com