கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில், வீட்டில் மான்கொம்பு, யானை தந்தம், புலி நகம், மயில்தோகை வைத்திருந்த சித்த மருத்துவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கூடலூா் கா்ணம் பழனிவேல் பிள்ளை தெருவில் வசிப்பவா் சண்முகம் மகன் நந்தகோபால் (42). சித்த மருத்துவரான இவரது வீட்டில், மான்கொம்பு, யானை தந்தம் இருப்பதாக கூடலூா் வனச்சரகா் பெ. அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை மற்றும் காவல்துறையினா் திங்கள்கிழமை இரவு நந்தகோபால் வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அவா் வீட்டில் காய்கனிக் கூடையில் 2 ஜோடி மான் கொம்புகள், சிறிய அளவிலான யானைத்தந்தம், 2 புலி நகம், 2 மயில் தோகைகள்ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவைகளைக் கைப்பற்றிய வனச்சரகா் அருண்குமாா், நந்தகோபாலை கைது செய்தாா்.
இதுகுறித்து வனத்துறை அலுவலா் ஒருவா் கூறியது: கைப்பற்றப்பட்ட பொருள்களை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். அவைகளின் வயது, இறந்த விவரம் தெரிந்த பின்னா் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.