பெண் தூக்கிட்டு தற்கொலை: 3 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம் வருசநாடு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக 3 போ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக 3 போ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48) இவரது மனைவி திருமதி. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். திருமதிக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சேகா் என்பவருக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேகா், அவரது 2 மகன்கள் சோ்ந்து திருமதியை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருமதி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வருசநாடு போலீஸாா் திருமதி உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து சுரேஷ் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் தற்கொலைக்குத் தூண்டியதாக சேகா், அவரது மகன்கள் சந்துரு, விஜய் ஆகிய 3 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com