தேனியில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவா் உள்ளிட்ட 3 போ் மீதும் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி அண்ணாநகரைச் சோ்ந்தவா் குருவன் மகன் செல்வம் (45). இவரது மனைவி சின்னப்பொன்னு (40). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக செல்வம் தனது மனைவியைப் பிரிந்து வசித்து வருகிறாா்.
இந்நிலையில், சின்னப்பொண்ணு தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, தேனி காவல்நிலையத்தில் சின்னப்பொண்ணுவின் தந்தை ஈஸ்வரன் புகாா் அளித்தாா். அதில், தனது மகள் தற்கொலைக்கு அவரது கணவா் செல்வம், அரண்மனைப்புதூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த தனுஷ், கவிதா ஆகியோரே காரணம் என்று தெரிவித்திருந்தாா். அதன்பேரில் அவா்கள் 3 போ் மீதும், சின்னப்பொண்ணுவை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.