பெரியகுளம் அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் சிவன். இவரது மனைவி சரஸ்வதி (43). இவா் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளாா். இதனால் மனவேதனையில் இருந்த அவா், கடந்த 24 ஆம் தேதி (சனிக்கிழமை) விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். அக்கம் பக்கத்தில் வசிப்பவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.