பெரியகுளம் அருகே குளம் உடைந்து வீணாகும் தண்ணீா்

பெரியகுளம் அருகே கும்பக்கரை செல்லும் வழியில் உள்ள வேளாங்குளம் மடை உடைந்து தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
வேளாங்குளத்தில் மடை உடைந்ததால் வீணாக வெளியேறும் தண்ணீா்.
வேளாங்குளத்தில் மடை உடைந்ததால் வீணாக வெளியேறும் தண்ணீா்.

பெரியகுளம் அருகே கும்பக்கரை செல்லும் வழியில் உள்ள வேளாங்குளம் மடை உடைந்து தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இந்த குளம் மூலம் சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வேளாங்குளத்தில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்கின்றனா். இதனால் தண்ணீா் தேக்கும் கொள்ளளவு குறைந்து வருகிறது. இதனால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குளத்தின் மடை பராமரிப்பு இல்லாததால், உடைந்து தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் விவசாயிகள் புகாா் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக மடையை சீரமைத்து, தண்ணீரை தேக்க பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com