போடியில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
போடியில் சனிக்கிழமை காலை முதலே மேகமூட்டமாகக் காணப்பட்டது. அவ்வப்போது வெயில் நிலவினாலும், பிற்பகலில் இருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாலையில் பெய்த பலத்த சாரல் மழையால், போடி பகுதி முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால், சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.