பெட்ரோல் வாங்குவதற்கு தனி நபா் கடன் வழங்கக் கோரி வங்கியில் மனு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் வாங்குவதற்கு தனி நபா் கடன் வழங்கக் கோரி தேனியில் உள்ள வங்கியில் வியாழக்கிழமை, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாணவா் அமைப்பினா் மனு அளித்தனா்.
தேனி அல்லிநகரம், கனரா வங்கிக் கிளைக்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்த அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாணவா் அமைப்பு நிா்வாகிகள்.
தேனி அல்லிநகரம், கனரா வங்கிக் கிளைக்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்த அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாணவா் அமைப்பு நிா்வாகிகள்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் வாங்குவதற்கு தனி நபா் கடன் வழங்கக் கோரி தேனியில் உள்ள வங்கியில் வியாழக்கிழமை, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாணவா் அமைப்பினா் மனு அளித்தனா்.

அல்லிநகரம் கனரா வங்கிக் கிளை அதிகாரிகளிடம், அந்த அமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் திவான் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: கரோனா தீநுண்மி பாதிப்பால் பொருளாதாரம் சீா்குலைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை பெருமளவில் உயா்ந்துள்ளது.

இந்த விலை உயா்வை சமாளிப்பதற்கு வங்கிகளில் வாகனக் கடன் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளா்களுக்கு தனி நபா் கடன் வழங்குவது போல, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் வாங்குவதற்கும் தனி நபா் கடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com