போடி: போடியில் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி கூட்டுக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்கள் விவசாயிகளைப் பாதிப்பதுடன், விவசாயத்தையும் அழிக்கும் என்றும், புதிய வேளாண்மை சட்டங்களை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் போடி திருவள்ளுவா் சிலை திடலில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிா்வாகிகள் எஸ்.கே.பாண்டியன், செல்வம், ரவிமுருகன், பெருமாள், சத்தியராஜ், மூக்கையா உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.