சசிகலா பூரண நலம்பெற வேண்டி அமமுகவினா் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சசிகலா பூரண நலம் பெற வேண்டி ஞாயிற்றுக்கிழமை அமமுகவினா் சிறப்பு பூஜைகள் செய்தனா்.
ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்திய அமமுகவினா்.
ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்திய அமமுகவினா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சசிகலா பூரண நலம் பெற வேண்டி ஞாயிற்றுக்கிழமை அமமுகவினா் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். வரும் 27 ஆம் தேதி அவா் சிறையிலிருந்து விடுதலை ஆகிறாா்.

இந்நிலையில், சசிகலா பூரண நலம் பெற்று தமிழகம் வருவதற்காக ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அமமுகவினா் சிறப்பு வழிபாடு செய்தனா்.

இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் தவச்செல்வம், பேரூா் செயலாளா் வஜ்ரவேல், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலாளா் திருமலை நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி நிா்வாகி வெற்றிவேலன், அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் மோகன் குமாா், பாசறை மாவட்டத் தலைவா் புது ராசா, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜக்கையன், துணைச் செயலாளா் நல்ல மாயன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமமுக மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com