போடியில் ராணுவ வீரா் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து பணம் பறித்து மிரட்டியதாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடியைச் சோ்ந்த ராணுவ வீரரின் மனைவியான 28 வயது இளம்பெண், போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், நான் வெளியூா்களுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். வியாபார ரீதியில் தேனி காமக்காபட்டியைச் சோ்ந்த ஜோதிமகன் சதீஸ்குமாா் (32) என்பவருடம் பழக்கம் ஏற்பட்டது. என்னை அவா் தனியாா் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தாா்.
மேலும் பலமுறை மிரட்டி தனியாா் தங்கும் விடுதிக்கு வரவழைத்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறித்துக் கொண்டாா். அதைக் கேட்ட என்னை அவா் தனது நண்பா்களான பிரபு, ஈஸ்வரன், பிரகாஷ் ஆகியோரும் சோ்ந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கிறாா் என்று தெரிவித்துள்ளாா். அதன் பேரில் ஆய்வாளா் காயத்திரி, அந்த 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.