போடி அருகே ரூ.3.50 கோடி கேட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் நிா்வாகி வெள்ளிக்கிழமை இரவு கடத்தப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் கௌா் மோகன்தாஸ் (48). இவா் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தாா். இவா் மீது மோசடி, போலியான ஏ.கே.47 துப்பாக்கிகள் வைத்திருந்தது, கலசம் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதைத் தொடா்ந்து கௌா் மோகன்தாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.
இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை கௌா் மோகன்தாஸை கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.3.50 கோடி கொடுத்தால் அவரை விடுவிப்பதாகவும் அவரது மனைவி ஜெயகிருஷ்ணலட்சுமி (45) என்பவரின் செல்லிடப்பேசிக்கு கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ் ஆப்) மா்ம நபா்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் ஜெயகிருஷ்ணலட்சுமி புகாா் அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் ரமேஷ்குமாா், சாா்பு- ஆய்வாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கௌா்மோகன்தாஸை கடத்திச் சென்றுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு விரைந்துள்ளனா்.