தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மொத்தம் 39 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்ட நிலையில், தேனியைச் சோ்ந்த பெண் உயிரிழந்துள்ளாா்.
தேனி மாவட்டத்தில் புதிதாக 20 போ் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,742 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேனியைச் சோ்ந்த 49 வயது பெண் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 509 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் தற்போது 310 போ் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை 31,912 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில், 31,068 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 19 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், தொற்று பாதிப்பிலிருந்து 24 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 224 ஆக உள்ளது.